நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் – துணை முதல்வர் பன்னீர் செல்வம்.
நாடு முழுவதும் நாளை 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னிர் செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை தகர்த்தெறிந்து, நம் தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வேளையில், மாண்புமிகு அம்மா அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளை சிறப்பிக்க திருவுருவச் சிலைகள், மணி மண்டபங்கள் அமைத்தல், தியாகிகள் ஓய்வூதியத் தொகை உயர்த்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்பதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன் என்றும் இப்பொன்னாளில், விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளை போற்றி வணங்கி, தாய்த்திருநாடும், நம் தமிழ்நாடும் வளம் பெற ஒற்றுமையாய் உழைத்திட உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…