துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சலசலப்பு….! போலீசார் தடியடி…!

Default Image

துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்ட, வஉசி சிலை திறப்பு விழாவில் சலசலப்பு. 

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், வஉசி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த ஒரு பிரிவினர், ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கமிட்டனர்.  அதாவது, ஒரு சமூகத்திற்கு அதாவது, 6 பிரிவுகளை  உட்படுத்தி, தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அந்த சமூகத்தினருக்கு அங்கீகாரம் கொடுக்க தமிழக அரசு பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு  தெரிவித்து, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்த்தவர்கள் துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன குரலையம், கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

பின் அங்கு போலீசார் தடியடி நடத்தி அந்த கும்பலை கலைத்துள்ளனர்.  இதனால், போலீசாருக்கும், போராட்டாக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சலசலப்பால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய பின் விழா தொடர்ந்து நடைபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்