கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு தெரிந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 48 நாள்கள் விரதத்துக்கு பின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசனம் செய்தார். நேற்றுமுன்தினம் பிற்பகல் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு துணை முதலமைச்சர் புறப்பட்டார்.
ஓ பன்னீர்செல்வம் நேற்றுமுன்தினம் இரவு பம்பைக்கு சென்றார். பம்பை வந்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு கேரள அதிகாரிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் ஓ பன்னீர்செல்வம் பம்பையிலே இரவு தங்கினார். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பம்பை நதியில் நீராடி கரி மலைப்பாதை வழியாக இருமுடி சுமந்தபடி நடந்து சென்று கோவில் சென்றார்.
கோவில் வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் 18-ம் படி வழியாக இருமுடி சுமந்தபடி ஐயப்பனை தரிசனம் செய்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது தயாராகி வருகிறது.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…