வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வடகிழக்கு பருவக்காற்றால் தஞ்சை, நாகை, திருவாரூர், தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.
நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. புதிய காற்றழுத்த தாழ்வால் நாளை மறுநாள் முதல் 19ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல்- நிலநடுக்கோட்டு பகுதியில் பலத்த சூறாவளி வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவக்காற்றால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.
காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை குமரி கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் இலங்கை தெற்கே அடுத்த நிலக்கோடு பகுதியில் பலத்த சூறாவளி வீசும், 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…