அதிமுக அலுவலகம் செல்ல ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுப்பு – போலீஸ் அறிவிப்பு

Default Image

அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தார். அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்லும்போது அவரை வரவேற்க தொண்டர்கள் கூடும் வாய்ப்பு உள்ளது. எனவே, இடையுறு இல்லாத வகையில் பாதுகாப்பு தர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் அனுமதி அளித்தால் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு தர தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்,  சென்னையில் உள்ள அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் வந்தால் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு தர முடியும் என போலீஸ் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று நேற்று மனு அளித்திருந்தார். கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைவதை தடுக்க பாதுகாப்பு தேவை. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கட்சியில் உறுப்பினர் அல்லாத ஒருவர் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை எப்படி கோர முடியும் என தெரிவித்திருநாதர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்