தமிழகத்தில் டெங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Published by
Rebekal

தமிழகத்தில் டெங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் உள்ள செட்டி தோட்டம் பகுதியில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்போது மக்களுக்கு டெங்கு கொசு பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கியுள்ளார்.

அதன் பின்பு அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது கூறிய அமைச்சர், முதல்வரின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 2,930 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  கொரோனா தொற்று நோய் பரவல் முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையால் வெகுவாக குறைந்து உள்ள நிலையில், தற்போது பருவமழை காரணமாக பரவி வரும் டெங்கு கொசுவை ஒழிக்க முதல்வரின் அறிவுறுத்தலின் படி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

7 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

8 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

10 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

10 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

11 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

12 hours ago