Dengue : அதிகாரிகள் வாரத்தில் 2 முறையாவது ஆய்வு செய்ய வேண்டும்.! டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் வேண்டுகோள்.!

Published by
மணிகண்டன்

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருவது போல, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே பரவி வருகிறது. தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சில மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துவிட்டன. இதனால் காய்ச்சலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது .

டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னையில் அரசு மருத்துவர்கள், மருத்துவ உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டு பேசினார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், தமிழகத்தில் 11,333 மருத்துவமனைகள் உள்ளன. அது போக புதியதாக 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை சேர்த்தால் தற்போது தமிழகத்தில் 11,833 மருத்துவமனைகள் உள்ளன. விரைவில் தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவமனைகள் 12 ஆயிரமாக மாறும்.

மருத்துவத்துறை அதிகாரிகள் , அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது மருத்துவமனை சுற்றி நீர் எங்கும் தேங்கியுள்ளதா.? கொசு உற்பத்தி ஏதேனும் இருக்கிறதா என்பதை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மழையானது மழைக்காலத்தில் மட்டும் தான் வரும் என்றில்லை. வெப்ப சலனம் காரணமாக எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் சூழல் இருக்கிறது. அதனால் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் மத்தியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

41 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

45 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago