குட்காவில் காட்டிய தீவிரத்தை டெங்குவிலும் காட்ட வேண்டும் – மு.க ஸ்டாலின்

Default Image

குட்காவில் காட்டிய தீவிரத்தை டெங்குவில் அமைச்சர் விஜயபாஸ்கர் காட்ட வேண்டும் என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.அரசு இன்னமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. தமிழகம் முழுவதும் 2000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறுவர்கள் கூட இறந்திருப்பது வேதனையாக உள்ளது . எனவே அரசு முழு கவனத்தையும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் செலுத்த வேண்டும். குட்காவில் காட்டிய தீவிரத்தை இதிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் காட்ட வேண்டும்.நிலவேம்பு கசாயம் டெங்குவை குணப்படுத்தும் என்பதால் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தொடர்ந்து வழங்க அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Bihar jewelry store robbery
MK Stalin Annamalai
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja