திருப்பூரில் 2 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களை இடிக்க தடை – உயர்நீதிமன்றம்

Published by
லீனா

திருப்பூர் மாவட்டம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களையும் இடிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை. 

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, இரண்டு கோயில்களையும் இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையத்தை சேர்ந்த கோபிநாதன் என்பவரும், வடுக பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நூற்றாண்டு பழமையான கோயில்கள் வருவாய் துறை ஆவணங்களில் இடம்பெறுவதில்லை. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த கோவில்களை இடிக்க கூடாது என வாதிட்டனர்.

மனுதாரரின் கருத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் நூற்றாண்டு பழமையான 2 கோவில்களையும் இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

5 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

5 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

6 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

6 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

7 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

9 hours ago