திருப்பூர் மாவட்டம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களையும் இடிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, இரண்டு கோயில்களையும் இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையத்தை சேர்ந்த கோபிநாதன் என்பவரும், வடுக பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நூற்றாண்டு பழமையான கோயில்கள் வருவாய் துறை ஆவணங்களில் இடம்பெறுவதில்லை. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த கோவில்களை இடிக்க கூடாது என வாதிட்டனர்.
மனுதாரரின் கருத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் நூற்றாண்டு பழமையான 2 கோவில்களையும் இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…