கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் திமுக எம்.பி.யும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் சூழலில் புதிய நாடாளுமன்றம் தேவையா? என பிரதமரிடம் கேட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, உள்ளிட்டோர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்புப் பணிக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி போதாது என்று கூறியுள்ளேன் என குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் மோடியிடம், பல்வேறு கோரிக்கைகள் வைத்துளேன் என டி.ஆர்.பாலு தெரிவித்தார். அதில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும். நடுத்தர குடும்பத்தினர் எரிவாயு பெற ரூ.5,000 மானியம் வழங்க வேண்டும். ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்துவர பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்தேன். இதுகுறித்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…