டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் உடன் கலந்து பங்கேற்றனர்.
இந்நிலையில் இவ்விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.
இது குறித்து அவர் பேசியவை: விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” அறிவிக்கப்படுகிறது.இதற்காகவே ஒரு தனிச்சட்டம் கொண்டுவரப்படும்.என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அறிவிப்பு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்ப்பை பெற்று உள்ளது. அதன்படி பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வரின் அறிவிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்து வரவேற்பு இதுகுறித்து கூறியவை:மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் நீண்ட நாள்கள் வலியுறுத்தப்பட்டது, போராடும் மக்கள் பத்தாண்டுகளாக முன்வைத்து வருகின்ற கோரிக்கையை ஏற்று இத்தைகைய அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம் அதே போல் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் முதல் செயல்பாடாக மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற கோருகிறோம் என தெரிவித்து உடன் கோரிக்கையும் வைத்து உள்ளது.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…