பாதுகாக்கப்படும் டெல்டா அறிவித்த முதல்வர்க்கு பல்வேறு தரப்பில் வரவேற்பு..!

Published by
kavitha

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் உடன் கலந்து பங்கேற்றனர்.

இந்நிலையில் இவ்விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

இது குறித்து அவர் பேசியவை: விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” அறிவிக்கப்படுகிறது.இதற்காகவே ஒரு தனிச்சட்டம் கொண்டுவரப்படும்.என்று தெரிவித்த அவர் தமிழகத்தில்  ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்ப்பை பெற்று உள்ளது. அதன்படி பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வரின் அறிவிப்பு  குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

 

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்து  வரவேற்பு  இதுகுறித்து கூறியவை:மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் நீண்ட நாள்கள் வலியுறுத்தப்பட்டது, போராடும் மக்கள் பத்தாண்டுகளாக முன்வைத்து வருகின்ற கோரிக்கையை ஏற்று இத்தைகைய அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம் அதே போல் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் முதல் செயல்பாடாக மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற கோருகிறோம் என தெரிவித்து உடன் கோரிக்கையும் வைத்து உள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago