டெல்டா பாதுகாப்பு மண்டலம் விவகாரம்… இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை… முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு…

Default Image

டெல்டா பகுதிகளை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுதொடர்பான சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில், குறிப்பாக காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கடந்த பிப்.9-ம் தேதி சேலம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு உயிர் கொடுக்கும் வகையில், இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் டெல்டாவை வேளாண்மண்டலமாக அறிவித்தது  தொடர்பான விதிமுறைகளுக்கு ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்