திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையத்தைச் சேர்ந்தவர் சவுந்தர் (27). சவுந்தரும், கம்மார்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரும் உறவினர்கள் ஆவர். இந்நிலையில் சவுந்தரும் கல்லூரி மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு, சவுந்தரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் காரணமாக திருமணத்திற்க்கு முன்பாகவே மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதை மாணவி தன் வீட்டில் மறைத்து வந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்று கருவை கலைத்தால், வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தால் , காதலிக்கு தானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியே எடுத்து வீசி விடலாம் என சவுந்தர் முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்தசில நாட்களாக பிரசவம் தொடர்பான வீடியோக்களை யூடியூப்-ல் பார்த்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈகுவார்பாளையம் காப்புக் காட்டுக்கு மாணவியை சவுந்தர் அழைத்துச் சென்றார். அங்கு, கல்லூரி மாணவிக்கு சவுந்தர் பிரசவம் பார்த்துள்ளார். அப்போது கையால் குழந்தையை பிடித்து இழுத்தபோது, குழந்தையின் ஒரு கை துண்டானது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையின் கையை காட்டிலேயே வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி ஆபத்தான கட்டத்தை நெருங்கவே, அச்சமடைந்த சவுந்தர், அவரை மோட்டார் சைக்கிளில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை, ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, மாணவிக்கு அறுவை சிகிச்சை மூலம் இறந்த நிலையில் இருந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் எடுத்தனர். தொடர்ந்து, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பாதிரிவேடு சீர்மிகு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சவுந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…