இனி மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும் – அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

Default Image

சார் பதிவாளர் அலுவலகங்களை மாற்றுதிறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.

தமிழா சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பான மானிய கோரிக்கை மீது இன்று பேரவையில் விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசிய பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களை மாற்றுதிறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  575 சார் பதிவாளர் அலுவலகங்களில் 533 அலுவலகங்கள் அரசு கட்டிடத்திலும், 42 அலுவலகங்கள் தனியார் கட்டிடத்திலும் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்