அவதூறு பேச்சு: திமுக எம்பி ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை விதிக்கவேண்டும் – அதிமுக புகார்

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக எம்பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து அவர் பிரசாரம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்.

திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட போது, முதல்வர் பழனிச்சாமியைப் பற்றி தரக்குறைவாக பேசி பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் தரக்குறைவாக பேசி வருவதால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இனிவரும் காலங்களில் திமுக எம்பி ஆ.ராசா எந்தவித தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, முதல்வர் பழனிசாமியை பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை என ஆ.ராசா தெரிவித்துள்ளார். எனது பேச்சை வெட்டியும், ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி ஆகிய இருவரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசியதை வெட்டி, ஒட்டி பரப்புகின்றனர்.

மேலும், முதல்வரின் மாண்புக்கு சேதம் விளைவிக்கும் வகையில் எந்த கருத்தையும் கூறவில்லை என முதல்வரை அவதூறாக விமர்சித்ததாக அதிமுக தேர்தல் அதிகரிடம் புகார் அளித்த நிலையில், ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

53 minutes ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

1 hour ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

2 hours ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

2 hours ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

3 hours ago

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

3 hours ago