இன்று மு.க.ஸ்டாலின் சிவகங்கை முதன்மை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 8-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாக கூறி மார்ச் 3 ஆம் தேதி அவதூறாகப் பேசியதாகக் கூறி அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் வழக்குப்பதிவு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி இன்று மு.க.ஸ்டாலின் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து மு.க.ஸ்டாலின் மீது அரசு சார்பில் 5 அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இல்ல விழாவில் பேசியது தொடர்பான அவதூறு வழக்கை ரத்து செய்து, மற்ற 4 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…