வைகோ மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Default Image

வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.வைகோ தற்போது  மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.அதாவது இன்று விசாரிப்பதாக அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து இன்று  விசாரணைக்கு  உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வைகோவால் ஆஜராக இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தீர்ப்பை வருகிற 30-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen