தீபாவளி : இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்…!

Default Image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்.

வரும் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுவாக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமாக தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பதாகவே டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.

இதனை அடுத்து தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3-ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அரசு விரைவு பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. டிஎன்எஸ்டிசி செயலி, அரசு செய்தி மற்றும் தனியார் போக்குவரத்து செயலிகள் மற்றும் ஆன்லைன் வழியாகவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்