இறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், போயஸ் தோட்ட வேதா நிலைய வீடு எனது பாட்டியால் வாங்கப்பட்டது. அந்த வீட்டை எனது அத்தைக்கு உயில் எழுதி என் பாட்டி வைத்தார்.
எங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுககள் இந்த இல்லத்தில் தான் நடைபெற்றது. இதனால், வேதா நிலைய வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. எனவே, வேதா இல்லத்தை கையகப்படுத்துவதும் அரசு அறிவிப்பை ரத்து செய்து,வீட்டை கையகப்படுத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கை மாற்ற கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகிய இரு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபா தொடர்ந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. மனு பட்டியலிட்ட பின் இரண்டு வழக்கையும் விசாரிப்பதாக கூறி வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…