கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில் பிரத்யேக இணையதள வசதி.! தொடங்கி வைத்த முதல்வர்.!

Published by
Ragi

கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில் பிரத்யேக இணையதள வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கடந்த 1985ஆம் ஆண்டு முதல் தேசிய கண்தான தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வயது முதல் அனைத்து தரப்பு வயதினரும் கண்தானம் செய்யலாம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பதினைந்து நாட்கள் தேசிய கண் தானம் குறித்த விழிப்புணர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டிற்கான தேசிய கண்தான துவக்க தினம் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நாளை முடிவடையும் நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி 35வது தேசிய கண்தான தினம் கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில் கண்தானம் செய்ய விரும்புவர்கள் எங்கு எவ்வாறு செய்வது என்ற விவரங்கள் தெரியாது. எனவே அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரத்யேக இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் நல்வாழ்வு குழுமத்தால் உருவாக்கப்பட்ட http://www.hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம் கண்தானம் செய்ய விரும்பும் நபர்கள் தங்களது பெயர், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்த பின்னர், கண்தானம் செய்வதற்கான உறுதிமொழியை ஏற்று கொள்ள வேண்டும். அதனையடுத்து கண்தானம் செய்ததற்கான சான்றிதழை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாளை கண்தான தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமியும் கண்தானம் செய்வதற்கான ஒப்புதல் அளித்து சான்றிதழ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

53 minutes ago
ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…

2 hours ago
பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…

2 hours ago
CSK vs RR: வெற்றி பெறுமா சிஎஸ்கே.? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு.!CSK vs RR: வெற்றி பெறுமா சிஎஸ்கே.? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு.!

CSK vs RR: வெற்றி பெறுமா சிஎஸ்கே.? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு.!

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…

3 hours ago
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! பெங்களூரு போட்டி இடமாற்றம்.! எங்கு தெரியுமா?ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! பெங்களூரு போட்டி இடமாற்றம்.! எங்கு தெரியுமா?

ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! பெங்களூரு போட்டி இடமாற்றம்.! எங்கு தெரியுமா?

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…

4 hours ago
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மாற்றம்.! ஃபைனல் எங்கு தெரியுமா.?ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மாற்றம்.! ஃபைனல் எங்கு தெரியுமா.?

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மாற்றம்.! ஃபைனல் எங்கு தெரியுமா.?

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…

4 hours ago