சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க முடிவு..?

Default Image

சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் ஒருவரிடம் திமுக எம்பி கனிமொழி  இந்தி தெரியாது என்று கூறியதற்கு  நீங்கள் இந்தியரா…? என்று கேள்வி கேட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து கனிமொழி கூறுகையில்,  விமான நிலைய காவலரிடம் இந்தி தெரியாது என்று கூறியதற்கு நீங்கள் இந்தியரா என்று கேட்டார்.  இந்தி தெரிந்தால் மட்டும் தான் இந்தியரா? இந்தி பேசுபவர்தான் இந்தியர் என்ற நிலை எப்போதில் இருந்து உள்ளது, என கேள்வி எழுப்பி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து, கனிமொழிக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகளும் ஆதரவாக பேசினர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலர் தங்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நேர்ந்த அனுபவத்தை கூறினார்கள்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருக்கும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளை மாற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய மொழிகள் தெரிந்தவர்களை சென்னையில்  நியமிக்க சிஐஎஸ்எஃப் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்