தமிழகத்தில் இ பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் 29-ம் தேதி ஆலோசனை.
கொரோனா பரவலை தடுக்க மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணம் செய்ய இ பாஸ் முறை அமலுக்கு வந்தது. சமீபத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று கூறியது.
இதனால், தமிழகத்தில் இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இ பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும், தமிழகத்தில் வருகின்ற 31-ம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…