[Representative Image]
மரக்காணம் கள்ளச்சாராயம் பலி 9 ஆக உயர்வு, சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் எனும் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 பேர் உயிரிழப்பு:
இந்த கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிரிழந்து வருவதால் உயிரிழப்புகள் அதிகமாகுமோ என்ற பதற்றம் அப்பகுதியில் உருவாகியுள்ளது. இருந்தும் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
10 லட்சம் ருபாய் நிவாரணம்:
இதற்கிடையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணத்தை நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…