சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு.!!

FireWorks

சிவகாசி ஊராம்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. 

சிவகாசி ஆனையூர் அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை 25 அறைகள் கொண்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் ஊழியர்கள் பலரும் வேலை செய்துகொண்டிருந்தபோது, பட்டாசுக்கு மருந்து செலுத்தும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிய இருளாயி, அய்யம்மாள், குமரேசன், சுந்தர் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகியது.

மேலும், இந்த தீ விபத்தில் ஏற்கனவே, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரேசன்(35), சுந்தர்ராஜ்(27) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அய்யம்மாள் (70) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த இருளாயி என்பவருக்கு சிவகாசி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்