மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் தலை சிதறி உயிரிழப்பு

Default Image

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே, தனியார் கல்லூரியில் பொறியியல் 4ஆம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த சையத், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், தனது அறையை தானியங்கி பூட்டு மூலம் பூட்டிக் கொண்டு வெளியே வந்த போது, சாவியை உள்ளே வைத்து விட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து,  மொட்டை மாடியில் இருந்து கயிற்றின் மூலம் பால்கனி வழியே இறங்கி, அறைக்குள் சென்று சாவியை எடுக்க முடிவு செய்தார்.

இந்நிலையில், சையத், மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கயிறு அறுந்ததில்,14வது மாடியிலிருந்து கீழே விழுந்த அவர் தலை சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்