முலாயம் சிங் யாதவ் மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்

Default Image

திரு.முலாயம் சிங் யாதவ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என டிடிவி தினகரன் ட்வீட். 

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ், கடந்த ஒரு வாரமாக  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான திரு.முலாயம் சிங் யாதவ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். பல்வேறு பொறுப்புகளில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்து நிற்கும்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்