தொடரும் பிரபலங்களின் மரணம்! ராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் சேர்மன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Default Image

ராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் சேர்மன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த  அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில், ராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் சேர்மன் தனலட்சுமி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், மூச்சுத்திணறல் மற்றும் இளைப்பு காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்