கொரோனாவால் 3 மற்றும் 5 வயது பெண் குழந்தைகள் உயிரிழப்பு.!

Default Image

இன்று உயிரிழந்வர்களில் அரியலூரை சேர்ந்த 5 வயது பெண் குழந்தையும், நாகையை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையும் கொரோனா மற்றும் பிற நொய் தொற்றினாலும் உயிரிழப்பு.

தமிழகத்தில் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அரியலூரைச் சேர்ந்த 5 வயது பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். ஜூலை 24ம் தேதி குழந்தைக்கு கொரோனா சோதனை மாதிரி எடுக்கப்பட்டது. அதன் பிறகு 25ம் தேதி முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுவாசக் கோளாறு காரணமாகவும் கடுமையான என்செபாலிடிஸ் நோய்க்குறி, நிமோனியா,கொரோனவால் 27ம் தேதி அன்று மாலை 03.30 மணிக்கு உயிரிழந்தது.

மேலும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை
திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யபட்டு 9-ம் தேதி அன்று திருவாரூர் வி.ஆர்.டி.எல் ஆய்வகத்தில் முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது.  இந்நிலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில்  கால்-கை வலிப்ப, நிமோனியா,  அதிர்ச்சி,பெருமூளை வாதம் மற்றும் கொரோனவால் 13ம் தேதி அன்று மாலை 01.45 மணிக்கு உயிரிழந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்