“அன்புள்ள ராகுல் ஜி….2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம்” – எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில்..!

Published by
Edison
2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் பாஜக அப்படி இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் (AIMC) குழுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய லோகோவை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.இதனையடுத்து,இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, பா.ஜ.க -வின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கி, மையத்திற்கு எதிரான சித்தாந்தங்களில் உள்ள வேறுபாடு உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து பேசினார்.குறிப்பாக,தற்போதைய பாஜக அரசின் ‘சச்சா ஆப்கே துவார்’ என்ற பெண் எதிர்ப்பு கொள்கைகளை விவரிக்கும் ஒரு சிறு புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
மேலும்,ராகுல் காந்தி அவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தலைவர் மோகன் பகவத் மற்றும் பாஜக – காங்கிரஸ் இடையேயான கொள்கைகளில் உள்ள வேறுபாட்டை விளக்கி கூறினார்.
கோட்சே, ஏன் அவரை சுட்டுக் கொன்றார்?:
இது தொடர்பாக அவர் கூறுகையில்: “இந்து மதத்தைப் புரிந்துகொண்டு அதை நடைமுறையில் வைத்தவர் மகாத்மா காந்தி.முழு உலகமும் ‘மகாத்மா காந்தி’யை ஒரு உதாரணமாகக் கருதுகிறது.ஆனால்,ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் ஏன் அவரது தோளில் 3 தோட்டாக்களை பாய்ச்சியது? .காந்தி அகிம்சையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர், மேலும் அகிம்சை என்பது இந்து மதத்தின் அடித்தளம், பிறகு கோட்சே, ஏன் அவரை சுட்டுக் கொன்றார்? .நான் மற்ற கட்சி கொள்கைகளுடன் சமரசம் செய்ய முடியும், ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளை என்னால் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது.
பிஜேபி ‘போலி இந்துக்கள்’ ,அவர்கள் இந்துக்களைப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் மதத்தை வர்த்தகம் செய்கிறார்கள்,எனவே, அவர்கள் இந்துக்கள் அல்ல”,என்று கூறினார்.
மோகன் பகவத்தின் படத்தை எந்தப் பெண்ணுடனும் பார்த்தீர்களா?:
தொடர்ந்து பேசிய அவர் கூடுதலாக, மகாத்மா காந்தியின் படத்தைப் பார்க்கும்போது, ​​அவரைச் சுற்றி 2-3 பெண்களைப் பார்ப்பீர்கள். மோகன் பகவத்தின் படத்தை எந்தப் பெண்ணுடனும் பார்த்தீர்களா?,பிரதமர் மோடி-ஆர்எஸ்எஸ் எந்தப் பெண்ணையும் பிரதமராக்கவில்லை,ஆனால்,காங்கிரஸ் உருவாக்கியது, காங்கிரஸ் பெண்களுக்கு ஒரு மேடை கொடுத்தது.ஆனால், ஆர்எஸ்எஸ் பெண்களை ஒடுக்குகிறது”, என்று அவர் கூறினார்.

இந்நிலையில்,ராகுல்காந்தி கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கூறியதாவது:”அன்புள்ள ராகுல் ஜி, 2-3 பெண்களைச் சுற்றி இருப்பது காங்கிரஸின் அளவுகோலாக இருக்கலாம்.
ஆனால்,பாஜகவைப் பொறுத்தவரை, பெண்களுக்கு அதிகாரமளிப்பது பெண்களைச் சுற்றி இருப்பதில் அல்ல, அவர்களுக்கு பதவி வழங்குவதில் உள்ளது.அதன்படி, நிதி அமைச்சராக சீதாராமன் ஜி உள்ளார்., வெளியுறவு அமைச்சராக சுஷ்மா ஜியும்,மேலும்,பெண் முதல்வர்களாக சுஷ்மா ஜி, ஆனந்திபென் ஜி,வசுந்தராப்ஜப் ஆகியோரும் ,ஆளுநராக நஜ்மா ஜி, பேபி ராணி மௌரியா ஜி, முர்மு ஜி ஆகியோரும் இருந்தனர்.
எனவே,நீங்கள் உங்கள் அளவுகோலை வைத்திருங்கள் நாங்கள் எங்களுடையதை வைத்துக்கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago