மீண்டும் மோடி பிரதமரானால், இந்திய தேசத்தை காப்பாற்ற இயலாது. இது மிகப்பெரிய எச்சரிக்கை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நவம்பர்08-தேசியப் பொருளாதார பேரிடர் நாள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை நிலைகுலைய வைத்த நாள்.
பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றியதாக, தவறான பொருளாதார கொள்கை எடுத்ததற்காக, இந்த தேசத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவிகிதத்தை சரிய செய்ததற்காக, அப்பாவி ஏழை, எளிய மக்கள் வங்கியின் வாசலில் காத்திருந்து உயிரிழக்க நேரிட்டது உள்ளிட்டவற்றிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
எனவே, மீண்டும் மோடி பிரதமரானால், இந்திய தேசத்தை காப்பாற்ற இயலாது. இது மிகப்பெரிய எச்சரிக்கை. மோடி மிக மோசமான சர்வாதிகார போக்குள்ளவராக, வரலாற்றில் தான் இடம் பெற வேண்டும் என்ற ஒரு வெறி பிடித்தவராக அவரது செயல்பாடுகள் அமையும். இது மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…