அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே.. இதனை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

Default Image

இந்த சிறப்பான நாளில் உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று தனது 100-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனால் ஒரு நாள் பயணமாக இன்று குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாயாரின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார். காந்தி நகரில் உள்ள தயார் ஹீராபென் இல்லத்தில், அவரை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

பிரதமர் மோடியின் தாயார் 100-வது பிறந்த நாளை பூர்த்தி செய்த நிலையில், அவரும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே, உங்கள் அம்மா 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்மா மீது உங்களுக்கு இருக்கும் அன்பை நான் நன்கு அறிவேன். ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும் போதும் என் அம்மாவின் உடல்நிலை குறித்து விசாரித்ததை அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்த சிறப்பான நாளில் உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தனது பதிவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்