வனப்பகுதியில் எறிந்த நிலையில் கிடந்த 30 வயது மிக்க பெண்ணின் சடலம்!அதிர்ச்சியான மக்கள்!

Default Image

திருச்சி மாவட்டத்தில் சிறுகனூர் அருகே உள்ள லால்குடிக்கு செல்லும் பாதை வனத்துறைக்கு சொந்தமான பகுதி உள்ளது.அதி பெண் ஒருவர் எறிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடைப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்.அப்போது அங்கு 30 வயது மிக்க பெண் பாதி எறிந்த மஞ்சள் சேலையோடு சடலமாக கிடந்துள்ளார்.

மேலும் காவல்துறையினருக்கு கை விரல்களில் சில்வர் மோதிரங்கள் மற்றும் கழுத்தில் அம்மன் படம் பொருந்திய பித்தளை டாலரும், கால் விரல்களில் மெட்டியும் அணிந்திருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மக்களிடம் விசாரணை மேற்கொண்டு,உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவத்துறையினர் 5 பிரிவில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்