நாடார் சமூக மக்களைக் குறித்து 9ம் வகுப்பு பாடநூலில் பொய்யான தகவல் இடம்பெற்றதுக்கு டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்..!
நாடார் சமூக மக்களைக் குறித்து 9ம் வகுப்பு பாடநூலில் பொய்யான தகவல் இடம்பெற்றதுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், நாடார் சமூக மக்களைக் குறித்து சாதி மற்றும் மோதலும் ஆடைமாற்றமும் என்ற தலைப்பின் கீழ் சிபிஎஸ்ஈ (CBSE) 9ம் வகுப்பு சமூகஅறிவியல் பாடநூலில் உண்மைக்குமாறான தகவல்களைக்கொண்ட பாடப்பிரிவினை நீக்க 2016ம்ஆண்டே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை நீக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.