துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி….

Default Image

தமிழக துணை முதல் அமைச்சரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் முதல்வர் இந்நாள் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஓ. பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிந்த பிறகு இன்று மதியம் அல்லது மாலை துணை முதல்வர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.  ஏற்கனவே, கடந்த மே 25 ஆம் தேதி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ . பன்னீர் செல்வம் அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்