தந்தையின் மெழுகுசிலை முன் நடைபெற்ற மகளின் திருமணம்..!
கள்ளக்குறித்து மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனது தந்தை காலமானதால், தந்தையின் மெழுகு சிலையின் முன் திருமணம் செய்து கொண்ட மகள்.
பொதுவாகவே பெண்களுக்கு தந்தை என்றால் தாய்ப்பாசம் உண்டு. எனவே எல்லா வைபவங்களில் தனது தந்தை எல்லாவற்றையும் முன் நின்று செய்ய வேண்டும் என விரும்புவதுண்டு. அந்த வகையில், கள்ளக்குறித்து மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனது தந்தை காலமானதால், தந்தையின் மெழுகு சிலையின் முன் திருமணம் செய்துள்ளார்.
செல்வராஜ் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது இளையமகன் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரை சேர்ந்த ஜெயராஜிற்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது தந்தை இல்லையே என்ற கவலையில் மகேஸ்வரி இருந்த நிலையில், அவரது திருமண நாளான இன்று ரூ.5 லட்சம் மதிப்பில், தத்த்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தந்தையின் சிலை முன்பாக திருமணம் செய்து கொண்டார்.