ஆகஸ்ட் 12 வரை விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு தடை!

Published by
Rebekal

விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 12 வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆடி பெருக்குக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது.

குறிப்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 12 வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதர் ரெட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் ஆகஸ்ட் 12 வரை பக்தர்கள் வழிபாடு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.

விலங்குகள் பலியிடுதல், திருவிழா நடத்துதல், ஜெபக் கூட்டங்கள், மசூதிகளில் தொழுகை, ஊர்வலங்கள், நேர்த்திக்கடன் செலுத்துதல் உட்பட்ட அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உட்பட ஏனைய கோவில்களில் இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

36 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

39 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago