ரகசிய வாக்களிப்பை சவக்குழியில் தள்ளும் அபாயச் செயல் – மு.க.ஸ்டாலின்

Published by
Venu
80 வயதுக்கு மேற்பட்டோரிடம் வீட்டுக்குச் சென்று தபால் வாக்கை பெறும் முறை, ஜனநாயகத்தின் உயிர்நாடியான ரகசிய வாக்களிப்பை சவக்குழியில் தள்ளும் அபாயச் செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பீகார் மாடல்’ கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி பேரதிர்ச்சி அளித்திருக்கிறது.பீகார் தேர்தலில், 80 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களும் மாற்றுத் திறனாளிகளும் ‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள்(Absentee voters) என்ற புதிய வகையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ‘தபால் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பூத் லெவல் அதிகாரி வீட்டிற்குச் சென்று தபால் வாக்குச் சீட்டைக் கொடுப்பார். வாக்குகள் பதியப் பெற்ற வாக்குச்சீட்டைத் திரும்ப வாங்கி வந்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார் – இதுதான் பா.ஜ.க. கூட்டணிக்கு உதவிய ‘பீகார் மாடல்.பாஜகவுக்கும் – அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில், நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம்.அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதித்து ஆரோக்கியமான தேர்தல் ஜனநாயகத்தை எண்ணத்தில் கொண்டு செயல்பட வேண்டும் .இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

17 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

12 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

13 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

14 hours ago