மதுரையில் 400 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்…!

Published by
லீனா

மதுரையில் 400 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்.

மதுரை மாவட்டம் ஆனையூர் கொக்குளத்தில் உள்ள பேக்காமன் கருப்பசாமி கோயிலில் பட்டியலினத்தை சேர்ந்த ஒரு நபர் பூசாரியாக உள்ளார். ஆனால் அந்த கோவிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே அந்த கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேசமயம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்றுதான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்புப்படி, பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி கேட்டு போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து அரசியலமைப்பு சட்டத்தின் படியும், நீதிமன்ற உத்தரவின் படியும், நாட்டில் உள்ள எல்லா கோயில்களிலும் அனைவரும் நுழைய அனுமதி உண்டு என்பதை கிராம மக்களிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அப்போது கோவில் பூசாரியான சின்னசாமிக்கு திடீரென்று அருள் வந்து அவர், ‘காலம் காலமாக இருக்கும் வழிமுறையை மீறி கோவிலுக்கு வருபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து கோவிலுக்குள் செல்வர்களை தெய்வம் பார்த்துக் கொள்ளட்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் முதன் முறையாக நுழைந்தனர். இதன்மூலம் கோவில் போன்ற பொது இடங்களில் தலித் மக்கள் நுழையக்கூடாது என்ற எழுதப்படாத சட்டமும் தகர்தெறியப்பட்டது.

Published by
லீனா
Tags: #Templetalit

Recent Posts

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

20 minutes ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

1 hour ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

1 hour ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

2 hours ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

2 hours ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

2 hours ago