சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால், விநியோகஸ்தர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்ய கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் சுந்தரேசன், கிருஷ்ண ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்நிலையில் வழக்கு தொடர்பாக இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கு கமிஷன் தொகையில் 20 முதல் 35 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.இவ்வாறு தொடர்ந்து 4 முறை இந்த முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்தின் உரிமம் ஆனது ரத்து செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மனுவில் தெரிவித்துள்ள நிலையில்.
வழக்கு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…