முதலில் இவங்களுக்கு… அப்புறம் அவங்களுக்கு… ரூ.6000 நிவாரணத்தொகை.! அமைச்சர் உதயநிதி விளக்கம்.!

Published by
மணிகண்டன்

மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பெரும்பாலான மக்கள் இன்னும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்து அளித்து வருகிறது.

எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் – அமைச்சர் உதயநிதி

ஏற்கனவே தமிழக அரசு சென்னை முழுவதும் உள்ள மக்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் ஒரு குடும்ப ரேஷன் கார்டுக்கு தலா 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் , 6000 ரூபாய் நிவாரண உதவி தொகையானது சென்னையில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கப்படும். மற்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்டும். டோக்கன் கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என கூறினார்.

அடுத்து, வெளியூரில் இந்து வந்து சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்களுக்கான நிவாரண தொகை பற்றிய கேள்விக்கு, முதலில் உள்ளூர் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் அடுத்து, வெளியூர் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தங்கி வேலை பார்க்கும் வெளியூர்வாசிகள் அந்தந்த பகுதி ரேஷன் கடைக்கு வந்து விண்ணப்பம் பெற்று நிரப்பி தர வேண்டும். அதன் பிறகு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின்னர் நிவாரண தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது.

Recent Posts

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

3 minutes ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

59 minutes ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

1 hour ago

இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!

ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?

பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…

2 hours ago

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

10 hours ago