ஃபெஞ்சல் புயல் எதிரொலி : இண்டிகோ விமான சேவைகள் ரத்து!

மோசமான வானிலை காரணமாக இண்டிகோ விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Indigo Plane Cancelled

சென்னை : கடந்த ஒரு 3 நாட்களாக சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இருப்பினும், விமான சேவைகள் எந்த வித தடையுமின்றி நடந்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக இண்டிகோ விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை விளைவாக மோசமான வானிலையால்  சென்னை விமான நிலையம் வந்த ஏராளமான விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.

இதே நிலை தொடர்ந்து நீடித்து வருவதால், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையிலிருந்து இன்று எந்த விமானங்களும் இயக்கப்படாது என இண்டிகோ விமான நிர்வாகம் அறிவித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும், பலத்த காற்றுடன் கூடிய கனமழை என மோசமான வானிலை நிலவுவதால் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் காணப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தொடர்பான அனைத்து சேவையானது இன்று (நவ.,30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan