சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

Default Image

சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கோடநாடு  எஸ்டேட் காவலாளியை கொலை செய்த கும்பல் அங்கு கொள்ளையில் ஈடுபட்டது.இந்த கொலை, கொள்ளைச் சம்பவம்  தொடர்பாக  சயன், மனோஜ், தீபு  உள்ளிட்ட  10 பேரை கைது செய்யப்பட்டனர் . பின்னர்  சயன், மனோஜ் உள்ளிட்டோர்  ஜாமீனில் வெளியே வந்தனர்.இந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தமிழக  முதலமைச்சர் பழனிசாமியை தொடர்புப்படுத்தி இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது .இதில் சயன், மனோஜ் ஆகியோரது பேட்டிகள் இடம்பெற்றது. இதனையடுத்து  இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

எனவே நீலகிரி மாவட்ட நீதிமன்றம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையிலுள்ள சயான், மனோஜ்  ஆகியோர் ஜாமீன்  கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய 4 சாட்சிகளை மிரட்டியுள்ளதால், ஜாமீன் தந்தால் மற்ற சாட்சிகளையும் மிரட்டக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நீலகிரி நீதிமன்றத்தில் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க அவசியம் இல்லை என்றும் காவல்துறை கூறியது. வாதங்களை கேட்ட நீதிமன்றம் ,சயன், மனோஜ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen