ஜூலை 11 அன்று அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட புகார் தொடர்பாக மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இருந்து சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே, மோதல் வெடித்தது . இதில் அதிமுக அலுவலகம் சேதமடைந்தது. பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது.
இது குறித்து இபிஎஸ் தரப்பில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்து இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் சிலவை திருடப்பட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகார் மீதான விசாரணையை சிபிசிஐடி போலீசார் கையாண்டனர். ஏற்கனவே, புகார் மீதான விசரணையை சி.வி.சண்முகம் அவர்களிடம் நடத்தினர். தற்போது மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து, சி.வி.சண்முகத்திடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த வாக்குமூலத்தை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி தரப்பில் தகவல் வந்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…