சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அசைவ உணவுகளான சிக்கன் , மட்டன் , மீன் போன்ற அனைத்து வகையான அசைவ உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஹோட்டலில் இருக்கும் ஊழியர் ஒருவர் ஒரு சிக்கன் பிரியாணி எடுத்து வந்து அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர் சாப்பிட்ட சிக்கன் துண்டில் புழு நெளிந்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலாக வேறு உணவு தருவதாக கூறினர். உடனே அந்த வாடிக்கையாளர் சிக்கனில் புழுவை புகைப்படம் பிடித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தார்.
சிக்கன் துண்டில் புழு இருந்ததற்கு கோழி இறைச்சி கடைக்காரர் தான் காரணமென திருநின்றவூரில் உள்ள காவல் நிலையத்தில் அந்த ஹோட்டல் நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…