சிக்கனில் நெளிந்த புழு அதிர்ந்த வாடிக்கையாளர்..!

Default Image

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அசைவ உணவுகளான சிக்கன் , மட்டன் , மீன் போன்ற அனைத்து வகையான அசைவ உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் ஒருவர்  சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஹோட்டலில் இருக்கும் ஊழியர் ஒருவர் ஒரு சிக்கன் பிரியாணி எடுத்து வந்து அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர் சாப்பிட்ட சிக்கன் துண்டில் புழு நெளிந்து கொண்டு  இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலாக வேறு உணவு தருவதாக கூறினர். உடனே அந்த வாடிக்கையாளர் சிக்கனில் புழுவை புகைப்படம் பிடித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தார்.
சிக்கன் துண்டில் புழு இருந்ததற்கு கோழி இறைச்சி கடைக்காரர் தான் காரணமென திருநின்றவூரில் உள்ள காவல் நிலையத்தில் அந்த ஹோட்டல் நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly