ஊரடங்கு உத்தரவு : இதுவரை ரூ.3.54 கோடி அபராதம்!

Default Image

ஊரடங்கு உத்தரவு மீறியதால், 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.3.54 கோடி அபராதம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் மே  3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை, போலீசார் கைது செய்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 3,75,747 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கை மீறியதற்காக இதுவரை, 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இதுவரை 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.3.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்