சென்னையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது .இதுவரை மொத்தமாக 1257 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகியது.முன்னதாக நாடு முழுவதும் வரும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்தபடி மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
அதாவது சிவப்பு மண்டலமான சென்னையில் 10% பணியாளர்களை கொண்டு ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. (இந்த தளர்வு Containment Zone-னிற்கு பொருந்தாது)சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல தடையில்லை உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில்,மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…