தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. ஆனால், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மளிகை கடைகள், காய்கறிகள் கடைகள், இறைச்சி கடைகள் போன்றவை திறக்கலாம் என்று, மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் இ-பதிவு பெற்று வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அவசரத் தேவைக்காக வெளியில் செல்பவர்கள் எந்த வாகனத்தில் செல்கிறார்கள் என்று பதிவு செய்து செல்ல முடியும். அதாவது ஆட்டோ, இருசக்கர வாகனம், பேருந்து, கார், வாடகை கார், இன்னோவா, எஸ்யூவி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் அதைப் பதிவு செய்து செல்ல கூடிய வசதி, தற்போது அரசின் இ-பதிவு இணையதளத்தில் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…