"தமிழகத்தில் முழுமையாக ஊரடங்கை தளர்த்த முடியாது" – மருத்துவ நிபுணர் குழு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என்றும் படிப்படியாக தான் தளர்த்த முடியும் எனவும் மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரிப்பதால், தற்போது 2 ஆம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலம் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீக்கப்படுமா ? என்று அனைவரது மனதிலும் கேள்வி எழுந்துள்ளது. இதனை குறித்து 3 க்கு பிறகு தான் தெரியும் என்று தகவலும் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபின் பேசிய மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர், தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த முதல்வரிடம் ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு விகிதம் உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா தொற்றை அதிகளவில் கண்டறிய முடிந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் மட்டும் கடந்த ஒரு வாரங்களில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை கட்டாயம் மக்கள் பின்பற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் கேட்டுக்கொண்டனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago