கடலூர்:ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
விருதுநகரில்:
அண்மையில்,விருதுநகரில் 22 வயது பட்டியலின பெண் ஒருவர் திமுக பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.இதனையடுத்து,குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,இந்த வழக்கு பொள்ளாச்சி சம்பவம் போன்று இருக்காது என்றும்,விரைந்து தண்டனை பெற்று தருவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
பெண் மருத்துவர்:
அதே சமயம்,வேலூரில் நள்ளிரவு படம் பார்த்து நண்பருடன் ஆட்டோவில் எரிய பெண் மருத்துவரை கடத்தி சென்று நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர்.
மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை:
இந்நிலையில்,கடலூரில் ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது:
அதன்படி,கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்(19 வயது),சபரி என்கிற கிஷோர் (19 வயது) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,பெண்ணின் ஆண் நண்பரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெண்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…